நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்று 5.30 மணிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் ஒருவரான பவன்குப்தா தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்தார். கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட புதிய மனுவை சீராய்வு செய்ய குறைந்த அளவே வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்த நீதிமன்றம் சிறையில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவிப்பது, விதிக்கப்பட்ட தண்டனையை சீராய்வு செய்வதற்கான காரணமாக கூற முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து தூக்கு உறுதி என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் குற்றவாளிகளை இறுதியாக சந்திக்க பெற்றோருக்கு 5 முதல் 10 நிமிடம் வரை ஒதுக்க வேண்டும் என அவர்களின் வழக்கறிஞர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசு தரப்பு முடிவு செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். ஆனால் சட்ட விதிகள் இடம்கொடுக்காது என்றும், இருபக்கமும் துயரத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி என நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காலை தூக்கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் உடல்நலத்துடன் உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…
Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும்…
Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…
Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடர்…
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…