பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!

பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்படும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

உயர்நீதிமன்றத்தில் காணாமல் போன தங்கள் பத்தாம் வகுப்பு படித்துவந்த மகளை மீட்டு தரக்கோரி அவரது பெற்றோர்கள் கொடுத்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் என் கிருபாகரன், பி வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது காணொலி காட்சி மூலம் மாணவியை ஆஜர்படுத்திய போலீசார் மாணவி ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து கூறிய நீதிபதிகள், பெற்றோரின் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறக் கூடிய இளம்பெண்கள் திருமணமான ஆண்களை மணந்து மணந்துகொண்டு துன்புறுத்தப் படுவதை காண முடிகிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருமணமானதை மறைத்து இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யக் கூடிய ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பெற்றோர் சம்மதமில்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்கள் திருமணம் ஆனவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது தொடர்பாக அடுத்த வாரத்தில் பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Rebekal

Recent Posts

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

6 mins ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

11 mins ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

32 mins ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

33 mins ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

42 mins ago

வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…

1 hour ago