Categories: உலகம்

இன்றைய உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.! தாய்லாந்தில் RSS தலைவர் பேச்சு.!

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக இந்து காங்கிரஸ் மாநாடு நடைபெறும். 2023ஆம் ஆண்டுக்கான உலக இந்து காங்கிரஸ் மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இன்று (நவம்பர் 24) தொடங்கிய மாநாடு நாளை மறுநாள் (நவம்பர் 26) முடிவுபெறும்.

தாய்லாந்தில் நடைபெற்ற இந்து காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்து அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் எனும் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்து சமயம் பற்றியும் , கலாச்சாரம் பற்றியும், இன்றைய உலகம் என்றும் பல்வேறு கருத்துக்களை கூறினார்.

அவர் கூறுகையில், உலகம் தற்போது தடுமாறி கொண்டிருக்கிறது. கடந்த 2,000 ஆண்டுகளாக பலரும் மகிழ்ச்சி, மற்றும் அமைதியை நிலைநாட்ட பல முயற்சிகளை மேற்கொண்டனர். கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் என பல்வேறு வகைகளில் அதனை தேடினர். பல்வேறு மதங்கள் மூலமும் அன்பையும், அமைதியையும் பெற முயற்சித்தார்கள்.  அதிக பொருட்செல்வம் வேண்டும் என கருதினர். ஆனால் எதுவும் திருப்தி அளிக்கவில்லை. இப்போது குறிப்பாக கொரானா காலத்திற்கு பிறகு, மக்கள் தங்கள் முயற்சிகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போது அவர்கள் நமது பாரதம் அதற்கான வழி கொடுக்கும் என ஒருமனதாக எண்ணுகிறார்கள்.

நமது இந்து மரபுகள் அனைத்தும் ‘தர்மத்தின்’ வழிகாட்டுதல்கள் ஆகும். ஒழுக்கத்தை பின்பற்றுவதற்கு நமது பாரதத்தில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் உதவும்.  இந்த உலகம் ஒரே குடும்பம். எல்லோரையும் ஒரே கலாச்சாரம் ஆக்குவோம்.

சத்தியமும் அகிம்சையும் நமது பாரதத்தின் அடிப்படை கொள்கைகள். நாங்கள் எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். அனைவரின் இதயத்தையும் தொடுகிறோம். அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் அனைவரையும் இணைக்க வேண்டும் என்றே நினைக்கிறோம்.

பொருளாதார தேவைகளுக்காக , அதனை அடைய மக்கள் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த எண்ணங்கள் நல்லதல்ல. அதன் நோக்கம் சுயநலம் மட்டுமே. அப்படிபட்டவர்கள் மற்ற சமூகங்களின் மீது ஆக்கிரமிப்புகளைச் செய்தார்கள். 250 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா ஆங்கிலேயர்களால் பொருட்செல்வத்திற்காக கொள்ளையடிக்கப்பட்டது என்றும் தனது உரையில் RSS தலைவர் மோகன் பகவத் தாய்லாந்தில் நடைபெற்ற உலக  இந்து காங்கிரஸ் 2023 மாநாட்டில் குறிப்பிட்டார்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

5 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

20 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

31 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

35 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago