அழிந்து வரும் உயிரினங்களை வேட்டையாட இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இதையும் மீறிபல்வேறு கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கடத்தல்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்கி வருகிறது.இந்நிலையில் அயல்நாடுகளுக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் நாகையில் பதுக்கி வைத்திருப்பதாக இராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வனசரகர் அயூப்கான் தலைமையிலான குழுவினர் மற்றும் காவல்துறையினர் நாகை அக்கரைபேட்டை பகுதியில் நேற்று திடீரென அதிரடி ஆய்வு நடத்தினர். அதில் அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோயில் அருகே 1 டன் எடை கொண்ட பதப்படுத்திய கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியை சேர்ந்த சந்திரசேகர்(45) மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை சாலையை சேர்ந்த செண்பகம்(60) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அப்பகுதியில் நடத்திய சோதனையில், அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியிலும் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது, பதப்படுத்தாமல் 1 டன் எடை கொண்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினத்தில் 2 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் எடை கொண்ட கடல் அட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியாகும் என தெரிவித்துள்ளனர்.
சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…
சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…