Sleep : நீங்கள் குப்புற படுத்து தூங்குவதால் இந்த பிரச்னைகளெல்லாம் ஏற்படுமா..? வாங்க பார்க்கலாம்..!

நம்மில் பெரும்பாலனவர்களுக்கு குப்புறபடுத்து தூங்கினால் தான் உறக்கமே வரும். இவ்விரு தூங்குவது முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குப்புற படுத்து தூங்கும்போது, ​​தலை, கழுத்து மற்றும் முதுகு ஆகியவை நீண்ட நேரம் ஒரே நிலையில் இருக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

குப்புற படுத்து தூங்குவதை விரும்புபவர்கள், தங்கள் தலை மற்றும் கழுத்திற்கு ஆதரவாக   ஒரு தலையணையைப் பயன்படுத்தலாம்.  அதிலும் பெண்கள் குப்புற படுத்து தூங்கும் போது மார்பு வலி ஏற்படுகிறது. குப்புற படுக்கும் பொது மார்பகத்தின் மீது  அழுத்தம் ஏற்படுவதால் நெஞ்சுவலி போன்ற பிற நோய்களும் ஏற்படலாம். 

குப்புற படுத்து தூங்குவது முகத்தின் அழகை பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், குப்புற படுத்து தூங்குவதால் முகசருமம் போதுமான ஆக்சிசனை பெற முடியாமல் போவதால் சில சரும பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. முக்கியமாக கர்ப்பமாக இருப்பவர்கள் குப்புற படுத்து தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இவ்வாறு படுப்பது தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும். 

குப்புற படுத்து தூங்குவது, செரிமான மண்டலத்தில்பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அஜீரண கோளாறு ,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே உங்களின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென்றால் , குப்புறபடுப்பதை தவிர்த்திடுங்கள்.

எனவே குப்புற படுத்து தூங்குவதை விட, வலது பக்கமாக அல்லது இடது பக்கமாக படுத்து தூங்குவது சிறந்தது.  இவ்வாறு படுக்கும்போது, ​​முதுகு மற்றும் கழுத்து ஆகியவை நேராக இருக்கும். இது தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு குறைவான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், செரிமானம் மற்றும் சுவாசம் ஆகியவை மேம்படும். 

Recent Posts

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

15 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

26 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

30 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

58 mins ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago

இந்தியாவுக்கு உண்டு .. பாகிஸ்தானுக்கு இல்லை ! தொடங்கவிருக்கும் டி20 வார்ம் அப் போட்டிகள் !!

சென்னை : டி20 உலகக்கோப்பைக்கான வாரம் அப் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி. இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருவது தான் டி20…

1 hour ago