Netherlands
நெதர்லாந்து : சேர்ந்த நரைன் மெல்கும்ஜான் என்ற பெண் விமானி, இலகுரக விமானம் ஒன்றை எடுத்துக்கொண்டு வானில் பறந்தார். வானில் நன்றாக பறந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென விமானத்தின் மேற்கூரை காற்றில் திறக்கப்பட்டதால் அந்த பெண் மிகவும் குழப்பமடைந்தது அதிர்ச்சியானார். மேற்கூரை திறந்து காற்று வேகமாக வீசியதால் பெண் பயத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தார்.
பின், வேகமாக வீசிய காற்றில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சிறிது நேரம் விமானத்தில் பறந்து கடைசியில் அந்த பெண் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.இந்த சம்பவம் முழுவதையும் அந்த பெண் விமானத்தை எடுக்கும்போதே கேமராவை ஆன் செய்து பதிவு செய்தார்.
அந்த வீடியோவை அவரே தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுடைய தைரியத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். எனவும், மேலும் சிலர் இனிமேல் செல்லும்போது எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்துவிட்டு விமானத்தை ஓட்டுங்கள் எனவும் கூறி வருகிறார்கள்.
வீடியோ காட்சியில் பார்க்கும்போது நமக்கு கை காலை நடுங்க வைக்கிறது. இந்த சூழலில், அந்த பெண் இந்த சம்பவத்தை எதிர்கொண்டது பற்றியும் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது ” ஏரோபாட்டிக் பயிற்சியின் ஒரு பகுதியாக விமானத்தில் எனது இரண்டாவது பயணம் இது. நான் எக்ஸ்ட்ரா 330 எல்எக்ஸ் (எக்ஸ்ட்ரா 330 எல்எக்ஸ் ஆன் போர்டில்) காற்றில் இருந்தபோது விமானத்தின் மேற்கூரை திறக்கப்பட்டது.
புறப்படுவதற்கு முன் சரியான கவனிப்பு எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், சரியான முன்னெச்சரிக்கைகள் எடுத்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும்” எனவும் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
ஆய்வு : மனிதர்களைப் போலவே யானைகளும் மற்ற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக கென்ய நாட்டின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. மனிதர்கள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை…
கமல்ஹாசன் : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டி கதை, திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம் என பல விஷயங்களில் நன்கு அறிந்தவராக இருக்கிறார். இயக்குனராக அவர் ஹே ரேம்,…
டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக 'டீன்ஸ்' என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து…
ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில்…
பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை…
மின்தடை : நாளை ( ஜூலை 9 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடசென்னை மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை,…