ஷில்பா மஞ்சுநாத்தை கதறி அழவைத்த உதவி இயக்குனர்! அவரே சொன்ன வேதனை கதை!

Shilpa Manjunath தமிழ் சினிமாவில் எமன், காளி, பேரழகி ISO, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் நடித்திருக்கும் படங்கள் குறைவு என்றாலும் இவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தது என்றே சொல்லலாம். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட சமயத்தில் எல்லாம் இவர் ட்ரெண்டிங்கில் இருந்தார் என்றே கூறலாம்.

தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு தமிழ் சரியாக தெரியவில்லை என்ற காரணத்தால் உதவி இயக்குனர் ஒருவர் அதனை குத்தமா சொல்லி கண்கலங்க வைத்ததாக மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

read more- தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு?

இது குறித்து பேசிய ஷில்பா மஞ்சுநாத் ” நான் சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில் எல்லாம் எனக்கு தமிழ் பேசவே தெரியாது. தமிழ் தெரியாது என்ற ஒரு காரணத்துக்காக நான் பல கஷ்டங்களை சந்தித்தேன். குறிப்பாக ஒரு முறை ஒரு படத்தில் நடித்து கொண்டு இருந்தேன். அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் என்னை ரொம்பவே கேலி செய்தார்.

READ MORE – பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.!

ஒரு முறை அப்படி செய்தால் கூட பரவாயில்லை ஆனால், பலமுறை அதையே சொல்லி என்னை கதறி அழ வைத்துக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் எல்லாம் அவரால் நான் ரொம்பவே மன வேதனைக்கு ஆளானேன். பிறகு ஒரு முடிவெடுத்து தமிழை கற்றுக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். நன்றாக தமிழ் பேசவும் எனக்கு வந்துவிட்டது. பின் அந்த உதவி இயக்குனர் மீண்டும் நான் நடித்த ஒரு படத்தில் பணியாற்றினார்.

அப்போது நான் பேசிய தமிழை பார்த்துவிட்டு என்ன நீங்க இப்படி பேசுறீங்க? என்று கேட்டார். நான் ஆமாம் நான் கற்றுக்கொண்டேன். நீங்கள் இன்னும் உதவி இயக்குனராக தான் இருக்கிறீர்கள் என்று அவரை கேட்டேன்” எனவும் ஷில்பா மஞ்சுநாத்  கூறியுள்ளார். மேலும் ஷில்பா மஞ்சுநாத்  கடைசியாக தெலுங்கில் Hide N Seek என்ற படத்தில் நடித்து இருந்தார்.

READ MORE- அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா?

அதனை தொடர்ந்து சமீபத்தில் அவருக்கு சிங்கப்பெண்ணே திரைப்படமும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அந்த படத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment