10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆறு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ளது அனைகரை இங்கு செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவன் நட்பாக பழகி உள்ளான். இந்த நட்பைப் பயன்படுத்தி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான்.மாணவன் அழைத்ததை நம்பி சென்ற பள்ளி மாணவிக்கு காத்திருந்தது அதிர்ச்சி வீட்டிற்கு அழைத்து சென்று தொடர்ந்து ஆறு நாட்களாக அடைத்து வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான் அந்த மாணவன்.
இந்நிலையில் பள்ளி சென்ற தனது மகள் காணமால் போனது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகார் தொடர்பாக விசாரித்த போலீசார் உண்மையை கண்டு பிடித்தனர். மாணவியை லாவகமாக தனது வீட்டிற்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவனை கையும் களவுமாக கைது செய்த போலீசார் அம்மாணவரின் வீட்டில் இருந்து மாணவியை மீட்டனர்.
இது தொடர்பாக வெளியான தகவல் : மாணவரின் பெற்றோர் வெளிநாட்டில் இருக்கிறார்கள் இதனைப் பயன்படுத்தி பள்ளி மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்து 6 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.இந்நிலையில் ஒருபுறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார்கு இம்மாணவன் மீது சந்தேகம் வலுக்கவே அவர்களின் கையில் வசமாக சிக்கிய கல்லூரி மாணவனை அவன் வீட்டியிலேயே வைத்து கைது செய்தனர் அவனிடம் விசாரணை நடத்திய பின் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அக்கல்லூரி மாணவன் ஒப்படைக்கப்பட்டான்.
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…