தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்..!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த  கூட்டத்தில், பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவ-1-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க ஏதுவாக இன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment