எஸ்பிஐ உள்ளிட்ட 6 வங்கிகளிடம் ரூ.400 கோடி கடன் வாங்கிய பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனத்தின் மீது எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு.
டெல்லியை சேர்ந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனமான ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் உரிமையாளர்கள் எஸ்பிஐ, கனரா, ஐடிபி, உள்ளிட்ட 6 வங்கிகளிடம் ரூ.411 கோடி கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பான கடந்த 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கழித்து பிப்ரவரி மாதம் எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் நரேஷ்குமார், சுரேஷ்குமார் மற்றும் சங்கீதா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது. வராக்கடன் வரையறுக்கப்பட்ட பின்னர், அந்நிறுவனத்தின் சொத்துகள் குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆய்வு மேற்கொண்டதாகவும், அப்போதே அவர்கள் நாட்டைவிட்டு சென்றுவிட்டதாகவும் சிபிஐ புகாரில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் கடன் வாங்கியவர்கள் நாட்டைவிட்டு செல்வதற்கு முன், எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டால், கடனை திரும்ப வசூலிப்பதில் சாத்தியமில்லை என தெரிந்த பிறகு, எஸ்பிஐ வங்கி சிபிஐயை அணுகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…