இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமானம் இல்லாத காரணத்தினால் சாம் கரண் 4 ஆம் டெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்படுகிறது.
இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைதொடர்ந்து இந்திய அணி, 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
தற்பொழுது இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருக்கும் நிலையில், அடுத்த அஹமதாபாத்தில் வரும் 24 ஆம் தேதி நடக்கவுள்ள 3 ஆம் டெஸ்ட் போட்டி, முக்கியமானதாக உள்ளது. இதற்காக இரு அணிகளுக்கு அஹமதாபாத்துக்கு புறப்பட்டு சென்றனர். இந்தநிலையில், இங்கிலாந்து அணியில் அதிரடி ஆல்-ரவுண்டர் சாம் கரண், 4 ஆம் போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தனிமைப்படுத்துதல் காரணமாக சாம் கரண் இந்தியா வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் 4வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்தியா வந்து அவர் தனிமைப்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமானம் இல்லாத காரணத்தினால் சாம் கரண் 4 ஆம் டெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்படுகிறது.
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…