சாகித்ய அகாடமி விருது என்பது சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும் உயரிய விருதாகும். இதில் இந்தியாவின் முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை. இந்த விருதில் மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை, நிலம் பூத்து மலர்ந்த நாள் என தமிழில் பொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இத்துடன் ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்பு பட்டயமும் விருதாக அவருக்கு அளிக்கப்படும்.
இதுகுறித்து பேசிய கே.வி.ஜெயஸ்ரீ, மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை தமிழில் மொழிபெயர்க்குமாறு எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்தார். பின்னர் சங்க கால தமிழ் இலக்கியத்தை குறித்து மலையாள எழுத்தாளர் எழுதியிருந்தது தனக்கு வியப்பை அளித்தது. மேலும் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது, என்றும் 20 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன் என தெரிவித்தார். இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாகித்ய அகாடமி விருது வென்ற கே.வி.ஜெயஸ்ரீக்கு வாழ்த்து கூறினார், அவர் மென்மேலும் இதுபோன்ற பல விருதுகளைப் பெற அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…