உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு துணை அதிபர் எலான் மஸ்க்கிடம் உதவி கோரினார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தங்களுக்கு உதவுமாறு உலக நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்து வருகிறது. அதன்படி, உக்ரைன் பிரதமரின் கோரிக்கை ஏற்று அமெரிக்கா, பிரான்ஸ், சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் ஆயுதங்கள் மற்றும் ராணுவ நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் துணை பிரதமரும், டிஜிட்டல் உருமாற்றம் அமைச்சருமான Mykhailo Fedorov, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளார். எலான் மஸ்க், நீங்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற முயற்சிக்கும்போது, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது.
ஸ்பேஸ் X நிறுவனத்தின் செயற்கைக்கோள் வெற்றிகரமாக வானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இங்கு ரஷ்யாவின் ராக்கெட் உக்ரைன் மக்களை தாக்குகிறது. எங்களுக்கு ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய சேவை வழங்கி ரஷ்யாவை எதிர்க்க துணை நிள்ளுங்கள் என Mykhailo Fedorov ட்விட்டர் வாயிலாக மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளார். இதற்கு பதிலளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் சேவை இப்போது உக்ரைனில் செயல் பட துவங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மறுபுறம் உக்ரைன் மீது முழு நடவடிக்கை எடுக்க ரஷ்யா அதிபர் உத்தரவிட்டிருந்தார். இதனால் உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கி வருகிறது. தலைநகர் கீவ்-ஐ ரஷ்யா படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மேலும் உக்ரன் நாட்டில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…