Rohit Sharma get the trophy in iconic Ric Flair strut [file image]
ரோஹித் சர்மா: கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியானது நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இந்திய அணியும் பார்படாஸ் மைதானத்தில் விளையாடினார்கள்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி இந்திய அணி விராட் கோலியின் நிதான ஆட்டத்தால் 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது.
அதன் பிறகு பேட்டிங் கிளம்பிறீங்க தென்னாபிரிக்கா அணி முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஓவர்களில் வெற்றியின் முனைப்பை நோக்கி நகர்ந்தது. ஆனால், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அற்புதமான பந்துவீச்சால் தென்னாபிரிக்க அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பார்கள்.
இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிய பெற்று இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருப்பார்கள். இதனால் 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி 20ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இந்த போட்டி முடிந்த பிறகு ஐசிசியின் செயலாளரான ஜெய்ஷா உலகக்கோப்பையை இந்திய அணியின் கேப்டனான ரோகித் ஷர்மாவிடம் வழங்குவார். அப்போது ரோஹித் சர்மா WWE ரெஸ்லரான ரிக் பிளேயர் (Ric Flair) ஸ்டைலில், அதாவது ரிக் பிளேயர் ஸ்ட்ரட் (Ric Flair Strut) எனப்படும் ஸ்டைலில் நடந்து வந்து கோப்பையை வாங்கி இருப்பார்.
அந்த வீடீயோவை நாம் பார்க்கும் போது இந்திய வீரர்கள் அனைவரும் மிகுந்த கொண்டாட்டத்திலும் குறிப்பாக ரோகித் சர்மா மிகுந்த சந்தோஷத்தையும் இருப்பார்.
பின் கோப்பையை வாங்கியவுடன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் ‘இந்தியா இந்தியா’ என முழங்கி வெற்றியை கொண்டாடுவார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி விடுகிறது.
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…
குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…