தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் ரோபோ..! பாஜக வேட்பாளரின் அதிரடி செயல்..!

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரோபோவை பயன்படுத்தி, மக்களுக்கு துண்டுபிரசுரங்களை விநியோகிக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ,மக்களை ஈர்க்கும் வண்ணம் அரசியல் கட்சிகள் பல்வேறு முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் ஹர்ஷத் படேல் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரோபோவை தயாரித்து உள்ளார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. பங்கஜ் தேசாய் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் பிரச்சாரத்திற்காக இந்த ரோபோவை இறக்கியுள்ளார். இவர் தொண்டர்களுக்கு பதிலாக ரோபோவை வைத்து மக்களுக்கு துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகிறார்.

Leave a Comment