76 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வந்த சாது பிரகலாத் ஜனி என்கிற 90 வயது சாமியார் உடல் நல குறைவால் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலத்தில் காந்திநகர் மாவட்டதிலுள்ள சரடா என்கிற கிராமத்தை சேர்ந்த சாது பிரகலாத் ஜனி என்கிற 90 வயது சாமியார் இன்று உடல் நல குறைவால் உயிரிழந்தார்.
இவர் கடந்த 76 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இவரை மக்கள் மாதாஜி என அழைத்து வந்துள்ளனர்.
இவர் உணவின்றி வாழ்வதை அறிந்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகளும் டாக்டர்களும் ஒரு சிறப்பு குழு மூலம் அவரை 2003 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் ஆராய்ச்சி செய்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில், அந்த சாமியார் உணவின்றி வாழ்வதற்கு ஓர் சிறப்பு உடற்பயிற்சி செய்து வருகிறார் என குறிப்பிட்டனர்.
சாது பிரகலாத் ஜனி சாமியார் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால், சொந்த ஊருக்கு சென்ற அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது அடக்கம் இவர் வாழ்ந்து வந்த ஆசிரமத்தில் நடைபெறும் என சாமியாரின் சீடர்கள் தெரிவித்துள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…