ராஜஸ்தான் ராயல்ஸ் வீரருக்கு கைகுலுக்க மறுத்த RCB அணி வீரர் …!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான ரியான் பராக் கைகுலுக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் படேல் பராக்குக்கு கை கொடுக்க மறுத்து விட்டு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. படேலின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.