ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரையும், அர்ஜுனா விருதுக்கு கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
தேசிய அளவில் விளையாட்டுத் துறையில், சிறந்த முறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய மிக உயரிய விருது தான் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. முன்னாள் இந்திய பிரதமர், மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக இவ்விருதுக்கு இந்த பெயரிடப்பட்டுள்ளது.
அதே போல் அர்ஜுனா விருது இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் வழங்கப்படும் விருது ஆகும்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. அதே போல் அர்ஜுனா விருதுக்கு கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர்களான ரவி தஹியா, தீபக் புனியா ஆகியோரும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…