நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலத்தித்து வருவதாக எப்போதுமே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், இருவருமே பேட்டிகளில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் வதந்திகள் எதையும் நம்பவே வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார்.
இருப்பினும் இவர்களுடைய காதல் வதந்திகள் நிற்கவில்லை குறிப்பாக கடந்த மாதம் கூட இவர்கள் இருவரும் இந்த பிப்ரவரி மாதம் பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. பிறகு இதற்கு விஜய் தேவரகொண்டா ” என்னுடைய திருமணம் குறித்து பரவுவது வெறும் வதந்தி. அவர்கள் சொல்வது எதுவும் உண்மை இல்லை” என விளக்கம் அளித்திருந்தார்.
சுதா கொங்கரா படத்திற்கு பை! ஹிந்தி படத்திற்கு செல்லும் சூர்யா?
இந்த நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் செய்யும் விஷயங்கள் அனைத்திற்கும் விஜய்யின் ஆதரவு எப்போதும் உண்டு. நான் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அந்த நேரத்தில் அவருடைய ஆலோசனையை கண்டிப்பாக எடுப்பேன். எதாவது எனக்கு தெரியவில்லை சந்தேகம் விஷயம் இருந்தால் அவரிடம் கேட்பேன்.
நான் சினிமா துறையில் இருக்கிறேன் என்ற காரணத்தால் எனக்கும் இது மிகவும் அவசியம். தனிப்பட்ட முறையில் விஜய் என் வாழ்க்கையில் மிகவும் உறுதுணையாக இருந்தவர். சினிமாத்துறையில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர் அவர் தான். எது நல்லது எது கெட்டது என்று எனக்கு நன்றாகவே தெரியும். என்னை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்” எனவும் ராஷ்மிகா மந்தனா கூறிஉள்ளார்.
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…
சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…