மத்திய அரசின் இந்த புதிய வேளாண் சட்டத்தை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பரிசோதனையாக செய்து பார்க்குமாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 31 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் புதிது புதிதாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு 5-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
இந்தநிலையில், பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங், இந்த வேளாண் சட்டத்தை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பரிசோதனையாக செய்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர், புதிய வேளாண் சட்டங்கள் விவசாய சமூகத்திற்கு பயனளிக்கவில்லை என்றால், மத்திய அரசு அதில் திருத்தங்களையும் செய்யும் என கூறிய அவர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தனது சொந்த மக்கள் என்று பேசிய அவர், போராட்டம் நடத்தும் விவசாயிகள், விவசாய குடும்பங்களில் பிறந்தவர்கள். அவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…
Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட…
Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…
China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…