Rahul Gandhi : பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த கடன் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் பாஜக ஆட்சியில் இதுவரை கார்ப்பரேட் நிறுவனங்களின் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை விவசாய கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக மீது தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பாஜக மீதான விமர்சனத்தை அடுக்கடுக்காக முன்வைத்துள்ளார். அதில், பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துள்ளார்.
இந்த 16 லட்சம் கோடி ரூபாய் கொண்டு, 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் சம்பளத்துடன் வேலை கிடைத்திருக்கும். 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம்.
10 கோடி விவசாயக் குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்து,எண்ணற்ற விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்திருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு வெறும் 400 ரூபாய்க்கு நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியிருக்கலாம்.
இந்திய ராணுவத்தின் மொத்த செலவுகளையும் 3 வருடங்கள் மேற்கொண்டு இருக்கலாம். தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞருக்கும் பட்டப்படிப்பு வரையிலான கல்வியை இலவசமாக வழங்கியிருக்கலாம்.
நரேந்திர மோடியின் இந்தக் குற்றத்தை இந்திய நாடு ஒருபோதும் மன்னிக்காது. ஆனால், இப்போது நிலைமை மாறும். ஒவ்வொரு இந்தியனின் முன்னேற்றத்திற்காகவும் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் என தனது சமூக வலைதள பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…
சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…