ராகுல் காந்தி புகார்!ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் போர் விமானங்கள் வாங்க எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளிப்படுத்த மறுப்பதால், அதில் ஊழல் நடந்திருப்பது தெளிவாகிறது என்று கூறியிருக்கிறார்.

Related image

பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் போர் விமானங்கள் வாங்க எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பதை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட மறுக்கிறார் என்றும், இதில் இருந்து இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது தெளிவாகிறது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதனிடையே பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பாரீஸ் சென்றது பற்றியும் ராகுல் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment