கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட 4 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது.
எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக புகார் கூறி தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சிறைபிடிப்பதும், பிறகு மீனவர்களை மட்டும் விடுவித்து படகுகளை அரசுடைமையாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிபந்தனை :
கடந்த 12ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்களை படகுடன் சேர்த்து இலங்கை ராணுவம் சிறைபிடித்தது. தற்போது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது.
படகு – அரசுடமை :
ஆனால், அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய படகு அரசுடைமையாக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்படுவர். அதன் பிறகு அவர்கள் இந்தியா திரும்புவார்கள்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…