கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு.!

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அங்கு அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை பொதுமுடக்கம் விதிகளை நீடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,429 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கேரளாவில் கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் நடவடிக்கையாக, அங்கு ஜூலை 2021 வரை பொதுமுடக்க விதிமுறைகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒரு அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணையில் சில விதிமுறைகளை விதித்துள்ளது.அதில்,

  • பொது இடங்கள், வழிபாட்டு தலங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, 6 அடி தூரம் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
  • யாரும் ஒரே இடத்தில் கூடக்கூடாது, அரசு அனுமதி பெறாமல் தர்ணா, போராட்டம், போன்றவை நடத்த கூடாது.
  • பொதுநிகழ்ச்சிகளில் 10 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல், மற்றும் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
  • திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி கிடையாது. அவ்வாறு பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
  • மேலும், சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவேண்டும். அதுமட்டுமின்றி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வரும் அனைவருக்கும் கிருமிநாசினி வழங்க வேண்டும்.
  • இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது எனவும், கொரோனாவால் உயிரிழந்தவருக்கு அரசு வகுத்த சிறப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
  • கொரோனா உள்ளதாக என சந்தேகப்படும் நபர் உயிரிழந்தாலோ, அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு, கொரோனாவால் உயிரிழந்தவருக்கு மேற்கொள்ளும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
  • வணிக வளங்களில் ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது எனவும், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும். மேலும், வாடிக்கையாளருக்கு கடை உரிமையாளர் கிருமிநாசினி வழங்க வேண்டும்.
  • பொது இடங்கள், சாலைகள், நடைபாதைகளில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago