ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை-தமிழக அரசு அரசாணை

மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நாளான ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை என்று  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது.அதேபோல்  இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்  நடைபெற உள்ளது.இதற்கான  வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கள் நடைபெற்று நேற்று  வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நாளான ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை என்று  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Comment