பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நாளை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொளி காட்சி மூலம் பீகாரில் ஒன்பது நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவைகளை தொடங்கி வைப்பார். இதன் மூலம் மாநிலத்தின் 45,945 கிராமங்களும் இணைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
இந்த ஒன்பது நெடுஞ்சாலைத் திட்டங்களில் சுமார் 350 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை ரூ. 14,258 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குகின்ற மாநிலத்தில் ரயில்வே, பாலங்கள், குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மோடி அன்மையில் அடிக்கல் நாட்டினார்.
பீகாரின் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சிறப்பு தொகுப்பை மோடி 2015 ஆம் ஆண்டில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பில் ரூ .54,700 கோடி மதிப்புள்ள 75 திட்டங்கள் அடங்கியுள்ளது. அவற்றில் 13 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும், 38 பணிகள் நடைபெற்று வருகின்றன, மற்றவை தொடங்கப்பட உள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…