பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சமூக ஊடகங்களில் உள்ள பெண்களின் முகப்பு புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்களில் இருந்து பெண்களின் முகப்பு புகைப்படங்களை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து, அதனை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளார். மார்பிங் செய்ததோடு அந்த புகைப்படங்களை அவர்களுக்கே அனுப்பி மிரட்டி ரூ.500 முதல் ரூ.4,000 வரை பணம் கேட்டுள்ளார்.
இவர் மிரட்டிய சிலர் தற்கொலைக்கும் முயற்ச்சி செய்துள்ளனர். ஆபாசமாக மார்பிங் செய்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 19 வயதான ஆதித்யா பிரசாந்த் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் காந்திநகரில் ஒரு அறுவை சிகிச்சை முகமூடி உற்பத்தி பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இதுவரை 33 பெண்களை பிரசாந்த் ஏமாற்றியுள்ளதாகவும், அதில் 22 பெண்கள் போலீசில் புகாரளித்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆதித்யா பிரசாந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் மேலும் கூறினர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…