இந்தியா

எங்கள் வெற்றியை எதிர்க்கட்சிகள் மறைக்க பார்க்கிறார்கள்.! பிரதமர் மோடி பேச்சு.!

டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார்.

கடந்த வாரம் தொடங்கிய 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று முடிந்து தற்போது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்களன்று உரையாற்றியதை தொடர்ந்து, நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை நிகழ்த்தினார். அதில் பேசுகையில்,  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மக்களின் நம்பிக்கையே காரணம். சுதந்திர இந்தியாவின் கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் ஒரு அரசுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்கள் ஆட்சி வழங்கியுள்ளனர். இது சாதாரண விஷயம் அல்ல.  கடந்த இரண்டரை நாட்களில், சுமார் 70 எம்.பி.க்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். குடியரசுத் தலைவர் உரை மீதான இந்த விவாதத்தை வளப்படுத்தியதற்காக எம்.பி.க்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் உரையாற்றி கொண்டு இருக்கும் போதே எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.

பொதுமக்கள் அளித்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் மறைக்க பார்கின்றனர். எங்கள் வெற்றியை இருட்டடிப்பு செய்ய எதிர்கட்சி உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். மேலும், மாநிலங்களவை தலைவர் ஜன்தீப் தன்கர் எதிர்க்கட்சி எம்பிகளை அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் குறிபிட்டார். இருந்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர் அமளிக்கு மத்தியிலும் பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்தார். அதில், இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை நிச்சயம் செய்து முடிப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் பிரதமர் மோடி தனது பதிலுரையில் குறிப்பிட்டார். பிரதமர் மோடி பேசிக்கொண்டு இருக்கும் போதே பிரதமர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Recent Posts

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

8 mins ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

47 mins ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

5 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

6 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

6 hours ago

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…

6 hours ago