#IPL2021: திடீரென வைரலாகும் வார்னரின் ஷூ.. அப்படி அதுல என்ன இருக்கு?

ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் அணிந்த ஷூ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டெல்லி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களும், டேவிட் வார்னர் 57 ரன்களும் அடித்தனர். அதனைதொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி, 18.3 ஓவர்களில் 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அணிந்திருந்த ஷூ, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஷூவில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர் பதிக்கப்பட்டு இருந்தது. இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வார்னரின் மனைவி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், “இந்த உலகில் எங்கிருந்தாலும், நாங்கள் எப்போது உங்களுடனே இருப்போம்” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், தான் ஒரு சிறந்த கணவர் மற்றும் அப்பா என்பதை வார்னர் நிரூபித்துள்ளார்.

Recent Posts

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

7 mins ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

37 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

56 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

2 hours ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago