வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாவிட்டால் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டாம் – இந்திய சுகாதார அமைச்சகம்!

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பத்து நாட்களுக்கு பின்பு எந்த ஒரு அறிகுறியும் இல்லாவிட்டால் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டாம் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி சுமை மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா நோயாளிகளுக்கான திருத்தப்பட்ட சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளது என வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நோயாளிகள் பத்து நாட்களுக்கு பின்பு காய்ச்சல் அல்லது சுவாசம் சம்மந்தப்பட்ட எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றால் மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட அறைக்குள்ளேயே 94% ஆக்சிஜன் செறிவு உள்ளதாகவும் லேசான அறிகுறிக்காக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் லேசான மூச்சுத்திணறல் மற்றும் சுவாச கோளாறு அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் உள்ள நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நோயாளிகளுடன் இருப்பதற்கு ஒரு பராமரிப்பாளர் நிச்சயம் வேண்டும் எனவும், இந்த பராமரிப்பாளர்களுக்கும் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் உள்ள நோயாளிகள் மருத்துவ அதிகாரியின் சரியான பரிந்துரைக்கு பின்பு மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நோயாளிகள் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவருடன் தொடர்பு இருக்க வேண்டும் எனவும், உடல்நிலை மோசம் அடையும் பொழுது மருத்துவருக்கு இது குறித்து அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவு காய்ச்சல் ஏற்படுவதாக தோன்றினால் ஒரு நாளைக்கு நான்கு முறை 650 மில்லிகிராம் பாரசிடமோல் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

7 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

7 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

12 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

13 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

13 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

13 hours ago