இபிஎஸ் பெயர் இருக்கு- ஓபிஎஸ் பெயர் மிஸ்!மாநகாரட்சி அழைப்பிதழால் அடுத்த குழப்பம்??

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக் கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாத நிகழ்வு அடுத்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என்று அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்புக்கு அக்டோபர் 7ம் தேதி  தீர்வு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷங்களை எழுப்பி நிகழ்வானது அதிமுக இரு பிரிவாக இருப்பதை வெட்ட வெளிச்சம் போட்டுவது போன்று உள்ளது. இரு பிரிவாக பிரிந்து அதிமுக நிர்வாகிகள் முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனைகளை தற்போது நடத்தி வருகின்ற நிகழ்வும் அரங்கேறி வருகின்றது.

இந்நிலையில் சென்னையில் இன்று இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகச்சியானது நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு  திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.சென்னை தீவுத் திடலில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் (urbaser sumeet India) ஆங்கிலத்தில் ஒரு அழைப்பிதழ் ஒன்றை அச்சடித்துள்ளது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்று உள்ளது.

ஆனால் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தமிழில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை. இது தற்போது சர்ச்சையாகி அடுத்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! அரசியல் தலைவர்கள் கண்டனம்.!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலையும், மாநில அரசின் மீதான கண்டனங்களையும் பதிவு செய்து…

2 mins ago

4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்..! அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோ..!

சத்தீஸ்கர் : மாநிலம் ராய்பூரில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் (housing board accountant) ஒருவர் திடீரென அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட…

10 mins ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை., குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.! ராகுல் காந்தி இரங்கல்.!

டெல்லி: BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். நேற்று, சென்னையை அடுத்த பெரம்பூர்…

36 mins ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை…கதறி அழும் பா.ரஞ்சித்!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது…

57 mins ago

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி…

57 mins ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது.! தவெக தலைவர் விஜய் வேதனை.!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழக மாநில…

1 hour ago