எதிர்க்கட்சிகள் அமளி..! மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20- ஆம் தேதி தொடங்கியது. கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், எதிர்க்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து,  எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்காததை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், 12-வது நாளான இன்றும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.