ஆன்லைனில் ரம்மி விளையாடுவது சட்டவிரோதமானது என கேரள மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்மை காலங்களாகவே ஆன்லைன் விளையாட்டுகள் எவ்வளவு அதிகரித்துள்ளதோ அதேபோல ஆன்லைன் மோசடியும் அதிகரித்துவிட்டது. சில மோசடி கும்பலிடம் சிக்கி தவிக்க கூடிய அப்பாவி மக்கள் தங்களது பணத்தை இழந்து அதன்பின் கடன் தொல்லையால் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீப காலங்களாகவே அதிக அளவில் ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனை அடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி பல்வேறு மாநிலங்களிலும் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவிலும் மனு அளிக்கப்பட்டு வந்தது. இந்த மனு மீதான விசாரணையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டதை அடுத்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசாங்கம் உறுதியளித்தது. இதனையடுத்து தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது எனும் அறிவிப்பை கேரளா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…