இன்றைய காலகட்டத்தில் விலை வாசிகள் அதிகரித்து உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தின் ஜெயம்கொண்டம் அருகே உள்ள இளையபெருமாள்நல்லூர் கிரமத்தில் உள்ள ஒரு இட்லி கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கப்படுகிறது.
இளையபெருமாள்நல்லூரில் காக்காபிள்ளை கடையென்றால் அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் அளவிற்கு இந்த இட்லி கடை பிரபலமடைந்து உள்ளது.ஏன் என்றால் இந்த இட்லி கடையில் காலையில் கூலி வேலைக்கு போகும் தொழிலாளர்கள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்த கடைக்கு வந்து விடுவார்கள்.
இந்த கடையை சிங்காரம்பிள்ளை , வள்ளி தம்பதி 1956-ம் ஆண்டு அவர்கள் திருமணமான அடுத்த மூன்று நாள்களில் தொடங்கினர். இந்த கடையை தொடங்கும் போது 1 ரூபாய்க்கு 4 இட்லி என விற்க தொடங்கினர்.
பின்னர் இவர்களது பிள்ளைகள் 50 பைசாவிற்கு இட்லி விற்று தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அக்கடையின் உரிமையாளர் வள்ளி கூறுகையில் , நானும் எனது கணவரும் 4 மரக்கா வரை கையால் இருவரும் அரிசி அரைத்து இட்லி விற்று வந்தோம்.
தற்போது தங்களின் மகன்கள் இந்த இட்லி கடையை நடத்தி வருவதாக கூறினார்.விலை வாசி உயர்ந்து உள்ள இந்த காலகட்டத்தில் 10 ரூபாய்க்கு வயிறு நிறைய உணவு கொடுக்கும் இந்த கடை பசித்தர்வர்களுக்கு தாயாக உள்ளது.
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…