நவம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவது போன்ற திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக நவம்பர் மாதம் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“வருகின்ற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்த அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி வரும் நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதனால்,வாக்காளர்கள் தங்களது பெயரை நீக்கம் அல்லது திருத்தம் செய்யவோ,மற்றும் இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள விண்ணப்பத்தை நவம்பர் 30-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அவற்றின் மீது டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும்,இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான படிவங்களை வழங்கலாம்.தொடர்புடைய வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், https://www.nvsp.in/ என்ற இணையதளம் மூலமாகவும், வாக்காளர் உதவி செயலி (VOTER HELP LINE- Mobile App) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.அதுமட்டுமல்லாமல்,வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களும் தங்கள் பெயர்களைச் சேர்க்கலாம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…