நடிகை நிதி அகர்வாலிற்கு கட்டப்படும் கோவில் ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவளிக்கும் உணவகமாகவும், படிக்கும் கூடமாகவும் இருந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அறிக்கை வெளியிட்டு நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகை நிதி அகர்வால் கடந்த பொங்கல் தினத்தன்று சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தாக நடிகர் பவன் கல்யாணிற்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் நடிகை நிதி அகர்வாலிற்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்தனர். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் சிலை வடிவமைப்பு பணிகள் நிறைந்திருப்பதால் அதற்காக பாலபிஷேகம் செய்யப்பட்டு ள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இந்த செய்தியை அறிந்த நிதி அகர்வால் இது குறித்து கூறுகையில் “நான் கண்டிப்பாக இதை எதிர்பார்க்கவே இல்லை. மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் இது போன்ற நிகழ்வுகளால் நான் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று உற்சாகம் ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து தனக்கு கோவிலில் கட்ட திட்டமிட்ட ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை ஒன்றை விடுத்தது தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், என்மீது எனது ரசிகர்கள் பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் உற்சாகம் அடைந்துள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய தொண்டு செய்து வருகிறார்கள் என்பது பாராட்டக்கூடிய விஷயம். அதே சமயம் எனக்காக கட்டப்படும் கோவில் ஏழைகளுக்கான தங்குமிடமாகவும் உணவளிக்கும் உணவகமாகவும், படிக்கும் கூடமாகவும் இருந்தால் எனக்கு மகிழ்ச்சி என இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…