TTV தினகரன் கனவு பலிக்காது..!! துணை முதல்வர் பரபரப்பு பேட்டி

Default Image
நெல்லை மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள  சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாளான இன்று நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவன்  சிலைக்கு மரியாதையை செலுத்த தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வருகை புரிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் கூறியதாவது..,
டிடிவி தினகரன் பகலில் வானத்தை அண்ணாந்து  பார்த்துக் கொண்டு, பகல் கனவு கண்டு கொண்டு இருக்கின்றார் எனவே தான் அவர் பலவாறாக பிதற்றி வருகிறார் என்றும் தெரிவித்தார், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என அவர்  கூறுவதும் இந்த வகை பகல் கனவை  சார்ந்தது தான்  என்று விமர்சித்தார்.அவர் இதுவரை ஒரு உண்மையான வார்த்தை கூட பேசியதாக தமிழக மக்கள் நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர்  கூறுகையில், திருவாரூர் முதல் திருப்பரங்குன்றம் வரை எந்த தேர்தல் நடந்தாலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்றும் இந்த தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடுவார்  என்றும் கூறினார்..
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்