மதுரையில் ரத யாத்திரையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்….!!

Default Image

தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செய்வதை கண்டித்து மதுரையில் சாலை மறியல் போராட்டம் செய்த  எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக,திக,விசிக,கம்யூனிஸ்ட்,நாம் தமிழர் போன்ற பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நுழைவதை கண்டித்தும், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தலைவர்களின் கைதை கண்டித்தும் மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை அருகில் எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதனையடுத்து, மதுரை மாவட்ட துணை தலைவர் ஜியாவுதீன், பொதுச்செயலாளர் பிலால்தீன் தலைமையில் சாலை மறியல் செய்த ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

பின்பு காவல்துறையினர் தங்களது வாகனத்தில் கைது செய்தவர்களை ஏற்றி சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்