புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதுமுள்ள நகை கடைகள் அனைத்தும் இன்று காலை 11.30 மணி வரை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகை கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு தங்க நகைக்கும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என இந்திய தர நிர்ணய நிறுவனம் புதிய விதி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய விதி வருகின்ற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய ஹால்மார்க் விதிக்கு நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நகைகளுக்கு தனி அடையாள எண் பெற வேண்டுமானால், நகை வாங்குவோரின் தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுவதாகவும், இதனால் தனிநபர் ரகசியம் காக்க இயலாத சூழல் உருவாகும் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகை கடைகளும் காலை 9 முதல் 11 .30 மணி வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…