மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் விதிக்கப்பட்ட அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ள்ளது.
மத்திய அரசு புதிய வாகன விதிகள் திருத்தத்தின்படி, தமிழக போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை தமிழகத்தில் விதித்தது. அதன்படி, ஹெல்மெட், லைசன்ஸ் இல்லாமல் இருப்பது, சாலை விதிகளை மீறுவது என பல்வேறு விதிமீறலுக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டன.
அதிலும், முதல் முறை தவறு செய்தால் ஒரு அபராத தொகையும், மீண்டும் அதே தவறை செய்தால் இரண்டு மடங்கு அபராதம் எனவும் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டது.
தற்போது புதியதாக ஓர் அதிரடி உத்தரவை தமிழக போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது. அதன்படி, மதுபோதையில் வாகனத்தை இயக்கினால் 10 ஆயிரம் அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.
இந்த அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அப்படி தவறினால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஏலம் விடப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அதிரடியாய் அறிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 5 நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தொடர்…
சென்னை: திரவ நைட்ரஜன் கலந்த பானை சாப்பிட்ட 12 வயது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் திரவ நைட்ரஜன் கலந்த பான்…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது…
சென்னை : பழைய பேருந்துகளை பழுதுபார்க்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புதிய பேருந்துகளை…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி…
சென்னை : குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவாக வெளியான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து…