அம்பானி – அதானி நாட்டுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவர் கருத்து.!

அம்பானி – அதானி நாட்டுக்கு ஆற்றிய பணிகள் பற்றி நாம் நினைத்து பார்க்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவர் கருத்து தெரிவித்துள்ளார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார், இன்று செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து நடத்திய ஆலோசனை குறித்து பேசினார் .

அதானி – அம்பானி :

அவர் பேசுகையில், அரசியல் களத்தில் அம்பானி மற்றும் அதானியின் பெயர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க மட்டுமே எடுக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை பற்றி நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நாட்டின் பிரச்சனைகள் :

நாட்டில் அதனை விட முக்கியமாக பேசிய வேண்டியது நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் போன்றவை பற்றி பேச வேண்டும் என நான் நினைக்கிறேன் என சரத் பவார் கூறினார்.

ஆலோசனை கூட்டம் :

மேலும், ‘ நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். நாங்கள் அங்கு அனைத்து பிரச்சனைகளையும் விவாதித்தோம். எங்களுக்குள் சில பிரச்சனைகள் இருந்தன. அனைத்தும் நாங்கள் உடன்படவில்லை.  அனைவரும் தங்கள் கருத்துக்களை ஆலோசனை கூட்டத்தில் முன்வைத்தனர் என்று 2024 தேர்தலுக்கான ‘எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவர் கூறினார்.

Leave a Comment