நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார் -நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

இதற்காக இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளர்.மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.

Leave a Comment