உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்து, முஸ்லிம் கைவினைஞர்கள 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தயால் என்பவர் 30 வருடங்களாக புது வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மணிகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் அவரும் அவரது குழுவினரும் இந்த முறை உத்தரபிரதேசத்தின் ஜலேசர் நகரத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அயோத்தியில் உள்ள ராம் கோயிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர்.
தயால் மற்றும் இக்பால் மிஸ்திரி இருவரும் சேர்து இந்த அளவிலான ஒரு மணியை உருவாக்கியது இதுவே முதல் முறை என்று கூறுகிறார்கள்.
இந்த அளவிலான ஒரு மணியை உருவாக்கும்போது சிரமத்தின் அளவு பல மடங்கு அதிகரிக்கும் என்று நான்காம் தலைமுறை மணி தயாரிப்பாளரான 50 வயதான தயால் கூறுகிறார். எங்களுக்கு உற்சாகம் என்னவென்றால் நாங்கள் அதை ராம் கோயிலுக்கு உருவாக்குகிறோம் என்றார்.
மணி என்பது பித்தளை மட்டுமல்ல, தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய எட்டு உலோகங்களின் கலவையை கொண்டது. இதுபோன்ற வேலையில் வெற்றி பெறுவது எந்த வகையிலும் உத்தரவாதம் இல்லை. உருகிய உலோகத்தை அச்சுக்குள் ஊற்றுவதில் ஐந்து விநாடிகள் தாமதமாக இருந்தாலும் முழு முயற்சியும் வீணாகிவிடும் என்று மிஸ்திரி கூறுகிறார்.
இதில் என்னவென்றால் இது ஒரு துண்டு மேலிருந்து கீழாக மட்டுமே உள்ளது. இதில் பல துண்டுகள் ஒன்றாக பற்றவைக்கப்படவில்லை. இதுதான் வேலை மிகவும் கடினமாக்கியது என்று கூறுகினார்கள்
இந்தியாவின் மிகப்பெரிய மணிகளில் ஒன்றான இந்த துண்டு ராம் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றனர். கடந்த நவம்பரில் இது குறித்து முடிவு செய்யப்பட்ட உடனேயே கோயில் கட்டுவதற்கு வழி வகுத்த அயோத்தி தகராறில் ஒரு வழக்குரைஞரான நிர்மோஹி அகாராவிடமிருந்து 2,100 கிலோ மணியை தயார் செய்ய மிட்டல்களுக்கு உத்தரவு கிடைத்தது.
இந்த வேலை எங்களுக்கு வந்ததற்கு ஏதேனும் தெய்வீக காரணம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனவே, அதை ஏன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம் என்று தலைவரின் சகோதரர் ஆதித்யா கூறுகிறார். இது அவர்களுக்கு 21 லட்சம் டாலர் வரை செலவாகும் என்று கூறினார்.
சுமார் 25 தொழிலாளர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் ஒரு மாதம், ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் உழைத்து நாட்டில் மிகப்பெரிய மணியை உருவாக்க முடியும். இதற்கு முன் தயால் உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் பயன்படுத்தப்பட்டு வரும் 101 கிலோ மணி மணியை உருவாக்கியது குறிபிடத்தக்கது.
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…