கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த இசைக்கலைஞர்கள் பேஸ்புக் நேரலையில் மூலம் கச்சேரி நடத்தி நிதி திரட்டி வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சாதாரணமாகவே கோயில் விழாக்கள், திருமண விழாக்கள் சிறப்பு நிகழ்வுகள் இன்னிசைக் கச்சேரிகளில் பாடும் இசை கலைஞர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் எப்படி மற்ற தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள் வேலைகள் கொரோனாவால் முடக்கப்பட்டதோ, அதைக் காட்டிலும் அதிகமாக இசை கலைஞர்களுக்கு சுத்தமாக வருவாய் இல்லாத நிலையில் அவர்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களை மகிழ்விக்கும் இசை கலைஞர்களுக்கு இசையால் இணைவோம் என்கிற தாரக மந்திரத்தோடு திருச்சி குருப்பிரியா என்கிற இசைக்குழுவினர் சேர்ந்து முகநூலில் நேரலையில் வாரத்திற்கு ஒரு நாள் இசை கச்சேரி நடத்தி, நிதி திரட்டி அரிசி உள்ளிட்ட பொருட்களையும் திரட்டி வாய்ப்பும் வருவாயும் சுத்தமாக இல்லாமல் தவித்து வரும் இசை கலைஞர்களுக்கு உதவி வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக நடைபெறும் இந்த பணியின் மூலம் நலிவுற்ற கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற உதவியை செய்ய முடிகிறது என கூறியுள்ளார் இசை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் குருப்பிரியா சுந்தரேசன்.
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…