தெலுங்கானாவில் தாய்-மகன் தற்கொலை வழக்கு – ஆளும் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது!

தெலுங்கானாவில் தாய்-மகன் தற்கொலை வழக்கில் ஆளும் கட்சியை சேர்ந்த 6 பேர் கைது என தகவல்.

தெலுங்கானாவில் ஆட்சியில் இருக்கும் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த ராமயம்பேட்டை நகராட்சி தலைவர் ஜித்தேந்தர் கவுடுடம் கடன் வாங்கி, கங்கம் சந்தோஷ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் சில நாட்களிலேயே ஜித்தேந்தர் தனக்கு 50% லாப பங்கு வேண்டும் என்று கேட்டதாகவும், இதற்கு சந்தோஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். லாபத்தில் பங்கு தர மறுத்ததை அடுத்து கடந்த ஒரு வருட காலமாக நகராட்சி தலைவரும் அவரது ஆதரவாலர்களும், கங்கம் சந்தோஷையும் அவரது தாய் பத்மாவையும் துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.

இதனை தாங்க முடியாமல் கங்கம் சந்தோஷும் அவரது தாய் பத்மாவும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, கடந்த 16-ஆம் தேதி காமரெட்டி நகரில் உள்ள ஒரு லாட்ஜில் இருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இதன்பின்னர் சந்தோஷ் மற்றும் அவரது தாயார் இருவரும் செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டு, வாக்குமூல கடிதமும் எழுதி, இதனை கங்கம் சந்தோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீஸார் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பேஸ்புக்கில் சந்தோஷ் வெளியிட்ட வாக்குமூலத்தில், எங்களது தற்கொலைக்கு ராமயம்பேட்டை நகராட்சித் தலைவர் ஜிதேந்தர் கவுடு, அவரது ஆதரவாலர்கள் மற்றும் காவல்துறையின் துன்புறுத்தலே காரணம் என கூறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தங்களது தற்கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று கூறி ஏழு பேரின் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை (டிஆர்எஸ்) சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் மீது போலீசில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இறந்த பிறகாவது நீதி கிடைக்கும் என்று நம்புவதாக அப்பதிவில் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நீதி கிடைக்க வேண்டும் என்று சந்தோஷ், பத்மா ஆகியோரின் உடல்களுடன் நகராட்சி தலைவர் ஜிதேந்தர் கவுடு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில், தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) ராமயம்பேட் நகராட்சித் தலைவர் பல்லே ஜிதேந்தர் கவுடு உட்பட 6 தலைவர்கள் தாய்-மகன் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். காமாரெட்டியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மற்றும் அவரது தாயாரை தற்கொலைக்கு தூண்டியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recent Posts

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

7 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

11 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

11 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

11 hours ago

அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…

12 hours ago

குருவின் பரிபூரண அருள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது..!

குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…

12 hours ago