சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பெண்ணொருவர் தனது ஐந்து பெண் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு சென்று மகாசமுந்த் மற்றும் பெல்சோண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ரயில் வரும் நள்ளிரவு நேரத்தில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். ஒரே நேரத்தில் ஆறு பேர் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் உடனடியாக கிராமத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரித்த போது உயிரிழந்த பெண் 45 வயதுடைய உமா எனவும், இவர் பெம்சா கிராமத்தை சேர்ந்தவர் எனவும் இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில நாட்களாக குடும்பம் சண்டை ஏற்பட்டு வந்ததாகவுஜம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக தான் 10 வயது முதல் 18 வயதுடைய தனது 5 குழந்தை பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து உள்ளார் என தெரிய வந்துள்ளது. தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…