கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கலாபுராகி, விஜயபுரா, யாத்கீர் மற்றும் ரைச்சூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
மேலும், பீமா நதி தொடர்ந்து அபாயக் குறியீட்டிற்கு மேலே தாண்டியதால் வெள்ள ஏற்பட அபாயம் இருப்பதன் காரணமாக 35,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் அதிகாரிகள், வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் 97 கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
மீட்பு படை வீரர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 36,290 பேர் வெளியேற்றிய பின்பு 174 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பெங்களூரில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழையால் சில இடங்களில் நீர் தேங்கியது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…