சொன்னதை செய்வார் மோடி! – அண்ணாமலை

பிரதமர் மோடி சொன்னதை செய்வார்  என அண்ணாமலை ட்வீட். 

பிரதமர் மோடி, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேரை விரைந்து பணியமர்த்துவற்கான  துவக்க நடவடிக்கையாக சிறப்பு முகாமினை தீபாவளி அன்று தொடங்கி வைக்க உள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் மோடி  அவர்கள், 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார்.

நமது நாட்டிற்கு சேவை செய்யக் காத்திருக்கும் 75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment