#Breaking : இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு.! கமல்ஹாசன் அறிவிப்பு.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதசார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் ஈவிகேஎஸ்..இளங்கோவன் அவர்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிப்பதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணிய சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது.

வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் : காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் களமிறங்க உள்ளார். இதனை ஒட்டி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.

மக்கள் நீதி மய்யம் ஆதரவு : இதுகுறித்து தற்போது கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், வரும் இடைத்தேர்தலில் மதசார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நிபந்தனையற்ற ஆதரவு : மேலும் அவர் கூறுகையில், வீட்டில் ஒரு இழப்பை சந்தித்து, ஒரு இக்கட்டான சூழ்நிலையும், மீண்டும் மக்கள் பணிக்கு திரும்பியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களை வெகுவாக பாராட்டுகிறேன். இந்த  மதற்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் எனவும்,  இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் வெல்ல வேண்டிய உதவிகளை செய்வோம். எனவும் இந்த முடிவு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்டது எனவும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

Recent Posts

சிசிடிவியை பார்த்தால் உண்மை தெரியும்… ஸ்வாதி மாலிவால் பரபரப்பு.!

சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…

3 mins ago

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

33 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

37 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

55 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

58 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

58 mins ago