சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஜனாதிபதி ஜி ஜின்பிங் கையாண்டதை விமர்சித்த சீன கோடீஸ்வரர் ஊழல் குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

சீன மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஓய்வுபெற்ற ரியல் எஸ்டேட் அதிபர் ரென் ஷிகியாங் கடந்த  மார்ச் மாதம் ஒரு கட்டுரையை ஆன்லைனில் வெளியிட்டார் அதில்,  டிசம்பர் மாதம் மத்திய நகரமான வுஹானில் தொடங்கிய கொரோனாவை ஷி தவறாகக் கையாண்டதாக குற்றம் சாட்டினார்.  இந்த கட்டுரைக்கு பின்னர் பொது பார்வையில் இருந்து மறைந்தார். பின்னர், ரென் ஷிகியாங் மீது ஊழல் தொடர்பான குற்றங்கள் சுமத்தப்பட்டன.

மேலும், இவர் 2012 ல் ஜி ஜின்பிங் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து பெய்ஜிங் சிவில் சமூகத்தின் மீதான தனது ஒடுக்குமுறையை முடுக்கிவிட்டுள்ளது, பேச்சு சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது மற்றும் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களை தடுத்து வைத்தது போன்ற பல்வேறு  குற்றசாட்டுகளை ரென் ஷிகியாங் முன்வைத்து வந்தார்.

இந்நிலையில், இன்று பெய்ஜிங்கில் உள்ள ஒரு நீதிமன்றம், பொது நிதியில் சுமார் 3 16.3 மில்லியன் மோசடி, லஞ்சம் வாங்குதல், மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் ரென் குற்றவாளி எனக் கூறி
நீதிபதிகள் அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து 620,000 டாலர் (4.2 மில்லியன் யுவான்) அபராதம் விதித்தனர்.

murugan

Recent Posts

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

4 mins ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

26 mins ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

51 mins ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

54 mins ago

பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…

1 hour ago

பெரிய சிக்கலில் சென்னை, லக்னோ அணிகள் !! வெளியேறும் மயங்க் யாதவ், தீபக் சஹர்?

IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…

1 hour ago